திங்கட்கிழமை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல், செயல் விளைவுகளுடைய தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட பரந்த அளவிலான மனித உரிமை பிரச்சினைகள் குறித்து உயர் ஸ்தானிகர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பைத் தவிர கிழக்கில் திருகோணமலை, வடக்கில் யாழப்பாணம் மற்றும் கண்டி ஆகிய நகரங்களுக்கும் இவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)