சீன-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் பிரதி வெளியுறவு அமைச்சர் உரை

சீன-தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் பிரதி வெளியுறவு அமைச்சர் உரை

சீனாவின், யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில், ஜூன் 18 முதல் 21 வரையில் நடைபெற்ற 9ஆவது சீன-தெற்காசிய கண்காட்சி மற்றும் 6ஆவது சீன - தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் (CSACF) வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பங்கேற்றார்.

இவ்வாண்டு கண்காட்சியின் தொனிப்பொருள் நாடாக இலங்கை இடம்பெற்றதால், இக்கண்காட்சி இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. 6ஆவது சீன - தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, மக்கள் தொகைசார் வலிமை, மூலோபாய அமைவிடம், உலகளாவிய வர்த்தகத்தில் அதிகரித்து வரும் பங்கு, கலாச்சார மற்றும் புலமைச் சொத்துக்கள் ஆகியற்றைக் கொண்டுள்ள தெற்காசியாவின், பிராந்திய ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்திற்கு இந்நிகழ்வானது முக்கியமானதாக அமைகின்றதென வலியுறுத்தினார்.

உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பசுமை சக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் வாய்ப்புகளை ஆராய சீனா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 

இதேவேளை, ஜூன் 20 ஆம் திகதி பிரதி அமைச்சர் யுனான் மாகாணத்தின் துணை ஆளுநருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். அங்கு பதப்படுத்தப்பட்ட உணவு, ஆடை, விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பு ஆராயப்பட்டது.

இலங்கையின் முயற்சியாண்மையாளர்கள் வெட்டப்பட்ட மலர்த் தொழிர்துறையில் யுனானின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளடங்கலாக, தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தில் அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். யுனான் மாகாணம் உலகளவில், 'தாவர மற்றும் விலங்கினங்களின் இராச்சியம்' என்று அங்கீகரிக்கப்பட்ட மாகாணமொன்றாக விளங்குகின்றது.

இலங்கைக்கான தொனிப்பொருள் காட்சிக்கூடமானது, ஜூன் 19 அன்று குன்மிங் டியான்ச்சி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இத்தொடக்க விழாவில் அமைச்சர் சமரசிங்க முக்கிய உரையையும் நிகழ்த்தினார்.

இக்கண்காட்சியில், இலங்கையின் பங்குபற்றலானது, அதன் பொருளாதார ரீதியிலான பலம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் உயிர்த்துடிப்பான காட்சி வெளிப்பாடொன்றாக அமைந்தது. இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், சிலோன் தேயிலை, தேங்காய் சார் உற்பத்திகள் மற்றும்  நார்ச்சத்துப் பொருட்கள் மற்றும், மசாலாப் பொருட்கள், கரிம மற்றும் நலன்சார் பொருட்கள், கைவினைப் பொருட்கள், "பத்திக்" புடவைச் சாய உற்பத்திகள், இனிப்புப் பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர் மதிப்புள்ள ஏற்றுமதிகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இலங்கையின் பங்கேற்பானது, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், ஏற்றுமதித் திறனை மேம்படுத்துதல் மற்றும் சீனா மற்றும் தெற்காசியாவில் இலங்கை வணிகங்களுக்கான சந்தை அணுகலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.