சொன்னதைச் செய்தால் பிமல் பாராளுமன்றில் அழத் தேவையில்லை: கீதநாத்

சொன்னதைச் செய்தால் பிமல் பாராளுமன்றில் அழத் தேவையில்லை: கீதநாத்

மதுபானசாலை அனுமதிப் பட்டியலை வெளியிட்டிருந்தால், அமைச்சர் பிமல் ரத்தாயக்க கசிப்பு விநியோகம் குறித்து பாராளுமன்றில் அழத்தேவையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழிரசுக் கட்சி தேர்தலில் வெல்வதற்காக கசிப்பு விநியோகம் செய்துள்ளது எனும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக் குறித்து பதிலளித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக குறிப்பிட்டுள்ள கீதநாத் காசிலிங்கம், 

"அமைச்சர் பிமல் ரத்நாயக்க தற்போது பாராளுமன்ற சிறப்புரிமையின் பின்னால் ஒளிந்து கொண்டு, வாக்குகளை வெல்ல தமிழ் கட்சிகள் “கசிப்பு மற்றும் லஞ்சம்” வழங்குகிறார்கள் எனக் குற்றம் சுமத்துகிறார். 

ஆனால், இதே பிமல் ரத்நாயக்க சார்ந்த தேசிய மக்கள் சக்தி, கடந்த அரசின் கீழ் மதுபான அனுமதிகள் பெற்ற சில வடக்கு எம்பிக்களின் பட்டியலை வெளியிடப்போவதாக தேர்தலுக்கு முன் வாக்களித்தது.

இப்போது, அந்த பட்டியலை வெளியிடுவதை அவர் சார்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியே தடுக்கிறது. குறித்த பட்டியல் வெளியாகியிருந்தால், இன்று பிமல் பாராளுமன்றத்தில் அழ வேண்டிய நிலைக்கு வந்திருக்கமாட்டார். 

இன்னும் தாமதமாகிவிடவில்லை; நீங்கள் வாக்குறுதி செய்தபடி அந்த பட்டியலை வெளியிடுங்கள்" என்றார்.